ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அந்த மொழிக்காரர்கள் அண்டை மாநிலத்தாருக்குத் தண்ணீர் தராமல் தடை செய்கிறார்களா? கடைகளை அடைத்துக்கலகம் செய்கிறார்களா? தங்கள் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையரை அடித்து உதைக்கும் பழக்கம் உள்ளவர்களா? எத்தனைப் பேருந்துகளை உடைத்திருக்கிறார்கள்? எத்தனை முறைத் தொடர்வண்டி மறியல்கள் செய்திருக்கிறார்கள்? என்பனவெல்லாம் தகுதிகள் ஆகா.
செம்மொழிக்கான முதன்மைத் தகுதிகள் மூன்று. அவை 1. தொன்மை, 2. செம்மையான இலக்கிய இலக்கணவளம், 3. தாய்மை என்பன. தமிழ்மொழி கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த செவ்விலக்கியங்களிலிருந்து கி.மு. விலேயே திரட்டிய, இன்றைய மொழியியலாரும் வியக்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை உடைமை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட உலகப் பேரறிஞர்கள் வியக்கும் செவ்வியலக்கியங்களை உடைமை, 153 திராவிடக் குடும்ப மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மை ஆகியவற்றைத் தன்னேரிலாத் தகுதிகாளகப் பெற்றது தமிழ்மொழி.
மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment