உலகம் முழுவதிலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து வேறுபல நாடுகட்குச் சென்று அலுவல் பார்ப்பது, வாழ்வது என்பது காலத்தின் கோலமாகிவிட்டது. குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஐரோப்பிய நாடுகட்கும் அமெரிக்காவுக்கும் செல்வது மிகுதியாகிக் கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கீழை நாட்டு மக்களின் உள்வரவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டு வருகின்றன. கடவுச் சீட்டு, நுழைவுச் சீட்டுப் போன்றவற்றின் கட்டுப்பாட்டோடு, குடிபெயர்வு தொடர்பான அவர்களின் சட்டங்களும் விதிமுறைகளும் வேறின மக்கள் தங்கள் நாடுகளில் அளவுக்கு மீறிக் குடியேறிவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன.
அந்தந்த நாட்டில் அந்தந்த மொழியே ஆள்கின்றது. அதைக் கற்றுக் கொள்ளாதவர்கள் அங்கே சென்று வாழமுடியாது; அலுவல் பார்க்கமுடியாது. மேலும் ஒரு நாட்டினுள் வெளிநாட்டினர் நுழைந்து நிலம், சொத்து வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் சட்டங்கள் உள்ளன. அந்தந்த நாடு அந்தந்த நாட்டு மக்கட்கு உரிமையா யிருப்பதில் எந்தக் குற்றமும் இல்லையே.
மேலும் படிக்க
Saturday, August 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment