Thursday, October 2, 2008

மக்கள் தொண்டர்கள் ஆட்சியைக் கைப்பற்றுக - ம. இலெ.தங்கப்பா

இந்த நாட்டில் பெரும்பாலான அரசியல் வாணர்கள் நேர்மையாளர்கள் அல்லர். தொண்டு நோக்கத்தோடு அரசியலுக்கு வந்தவர்களும் அல்லர். எந்த ஒழுங்கு முறையும் இல்லாத இந்தச் செயற்கை நாட்டில் அரசியல் என்பது நேர்மையில்லா வழிகளில் பொருள் ஈட்டுவதற்கான ஒரு தொழில். தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையில் குற்றங்கள் செய்வதற்கான ஒரு வாய்ப்பு. அதிகாரத்தினால் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையம் பயன்படுத்தி எல்லாவகை இன்பங்களையம் நுகர்வதற்கான வேட்டைக்காடு. அதிகார வலிமையால் பிறரை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது குதிரை ஏறும் ஒரு மகிழ்ச்சி விளையாட்டு.

அரசியலுக்கு வருபவர்களுக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை. புறத்தகுதியும் தேவையில்லை அகத்தகுதியும் தேவையில்லை. எந்தக் காட்டானும் வரலாம். எந்தக் கழுதையும் வரலாம்.

வலிமையும் செல்வாக்கு மிருந்தால் அடாவடித் தனமும் எத்துவேலையும் தெரிந்தால் எவன் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் வெற்றி பெறலாம். ஆட்சியிடத்தில் அமர்ந்து கொள்ளலாம். நினைத்தபடி ஆட்டம் போடலாம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கலாம். சொந்த மண்ணையே விற்றுத்தின்னலாம். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்? பொருள் ஈட்டுதலே குறிக்கோள். அதற்கு என்ன தவறும் செய்யலாம். தண்டனை கிடையாது என்று ஆகிவிடும்பொழுது யார்தான் என்னதான் செய்ய மாட்டார்கள்?

மேலும் படிக்க

0 comments: