Saturday, August 30, 2008

பேருந்துகளை உடைப்பதுதான் செம்மொழிக்கான போராட்டமா?

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அந்த மொழிக்காரர்கள் அண்டை மாநிலத்தாருக்குத் தண்ணீர் தராமல் தடை செய்கிறார்களா? கடைகளை அடைத்துக்கலகம் செய்கிறார்களா? தங்கள் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையரை அடித்து உதைக்கும் பழக்கம் உள்ளவர்களா? எத்தனைப் பேருந்துகளை உடைத்திருக்கிறார்கள்? எத்தனை முறைத் தொடர்வண்டி மறியல்கள் செய்திருக்கிறார்கள்? என்பனவெல்லாம் தகுதிகள் ஆகா.

செம்மொழிக்கான முதன்மைத் தகுதிகள் மூன்று. அவை 1. தொன்மை, 2. செம்மையான இலக்கிய இலக்கணவளம், 3. தாய்மை என்பன. தமிழ்மொழி கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த செவ்விலக்கியங்களிலிருந்து கி.மு. விலேயே திரட்டிய, இன்றைய மொழியியலாரும் வியக்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை உடைமை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட உலகப் பேரறிஞர்கள் வியக்கும் செவ்வியலக்கியங்களை உடைமை, 153 திராவிடக் குடும்ப மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மை ஆகியவற்றைத் தன்னேரிலாத் தகுதிகாளகப் பெற்றது தமிழ்மொழி.

மேலும் படிக்க

விழுங்கவரும் இனக் கடல்கோள் - பேரா.ம.இலெ.தங்கப்பா

உலகம் முழுவதிலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து வேறுபல நாடுகட்குச் சென்று அலுவல் பார்ப்பது, வாழ்வது என்பது காலத்தின் கோலமாகிவிட்டது. குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஐரோப்பிய நாடுகட்கும் அமெரிக்காவுக்கும் செல்வது மிகுதியாகிக் கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கீழை நாட்டு மக்களின் உள்வரவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டு வருகின்றன. கடவுச் சீட்டு, நுழைவுச் சீட்டுப் போன்றவற்றின் கட்டுப்பாட்டோடு, குடிபெயர்வு தொடர்பான அவர்களின் சட்டங்களும் விதிமுறைகளும் வேறின மக்கள் தங்கள் நாடுகளில் அளவுக்கு மீறிக் குடியேறிவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன.

அந்தந்த நாட்டில் அந்தந்த மொழியே ஆள்கின்றது. அதைக் கற்றுக் கொள்ளாதவர்கள் அங்கே சென்று வாழமுடியாது; அலுவல் பார்க்கமுடியாது. மேலும் ஒரு நாட்டினுள் வெளிநாட்டினர் நுழைந்து நிலம், சொத்து வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் சட்டங்கள் உள்ளன. அந்தந்த நாடு அந்தந்த நாட்டு மக்கட்கு உரிமையா யிருப்பதில் எந்தக் குற்றமும் இல்லையே.

மேலும் படிக்க

தமிழிசை - அன்றும் இன்றும் - 3

கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரையில் மிகச்சிறந்த நிலையிலிருந்த தமிழிசை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையயடுப்பாலும், களப்பிரர், பல்லவர், முகலாயர், தெலுங்கர், மராட்டியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலியோரின் அரசியற் படையெடுப்பாலும் அவர்களின் ஆட்சியினாலும், போற்றுவாரற்றுப் பொலிவிழந்து போயிற்று. வடநாட்டினரின் வல்லாண்மையால், மறைக்காடு, குடமூக்கு என்ற ஊர்ப்பெயர்கள் யாவும் வேதாரண்யம், கும்பகோணம் என வடமொழிமயமாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம்.

மேலும் படிக்க