Monday, July 28, 2008

தமிழிசை - அன்றும் இன்றும் - முனைவர் இரா. திருமுருகன்

2. ஒரே ஒத்தில் இசைத்தல் :தமிழிசையில் ஓர் இசை நிகழ்ச்சியின் தொடக்க முதல் முடிவு வரையில் ஓரே அடிமணை (ஆதார சுருதி) யில் நின்று இசைப்பார்கள். அந்த அடிமணை நரம்பு 'ஒத்து' எனப்படும். ச என்னும் குரல் நரம்பு அடிமணையாகக் கொள்ளப்படும். ஒரே நிலையில் நின்று இசைப்பதால் அதனைக் கேட்போர் மனம் ஒருநிலைப்படுகிறது. அதனால் ஒத்தினை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வழக்கம் தமிழி சையில் இல்லை. ஆனால் மேனாட்டிசையில் ஒரு நிகழ்ச்சியில் பலமுறை ஒத்தினை மாற்றிக் கொள்வது இயல்பாக உள்ளது.
3. நுண்ணலகு முறை :தென்னக இசையில் 22 அலகு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இவற்றின் மேலும் சில நுண்ணலகுகள் உண்டு. இம்முறைதான் தமிழிசையில் பண்கள் நுட்பமாக வேறுபட்ட நிறங்களைப் படைத்து வேறுபட்ட உணர்வுகளை உண்டாக்க உறுதுணையாக உள்ளது. ஆனால் மேனாட்டிசையில் 12 நரம்பிடங்கள் (சுரத்தானங்கள்) மட்டுமே கொள்ளப்படுகின்றன. மேலும் படிக்க

0 comments: