Monday, July 28, 2008

தொல்காப்பியத்துட் கண்ட செவிலித்தாய் பற்றிய குறிப்புகள் - புலவர் தி. சா. கங்காதரன்.

செவிலி, பரம்பரையாகத் தலைவியயாடு பிரிவின்றி இயைந்த தொடர்பு கொண்டவள், செவிலி தலைவிக்கு வளர்ப்புத்தாயாக இருக்கும்போது, செவிலிமகள் தலைவிக்கு உயிர்த்தோழியாயிருப்பாள். இத்தோழி பின்னர்த் தலைவியின் மகட்குச் செவிலியாகுமிடத்து. அவள்மகள் தலைவியுடைய மகட்குத் தோழியாவாள். இவ்வாறு பரம்பரையாக வரும் சிறப்புக் காரணத்தான், தலைவியின் களவொழுக்கச் செய்தியைக் குறிப்பானன்றிக் கூற்றினான் நற்றாய்க்குக் கூறுதற்கு உரிமையுடைய செவிலியே 'தாய்' என்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள். தலைவியைப் பயந்த தாயை 'நற்றாய்' என்று அடைகொடுத்தே குறிப்பிடல் வேண்டும். வாளா 'தாய்' என்று சுட்டின், அச்சொல் செலிலித்தாயையே குறிக்கும்.

'ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயயனப் படுவோள் செவிலி ஆகும்' (124)

செவிலி தலைவியின் களவொழுக்கத்தை வெளியிட நேரிடையாக நற்றாய்க்கே அறத்தொடுநிற்பாள். 'தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும்' (138) தலைவி தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டவழி, அவளைத் தேடிக்கொண்டு செவிலி அருவழிக்கண் தந்தையும் தன்னையரும் உணராமுன் எதிர்ப்பட்டு மீட்டற்குச் செல்வாள். மேலும் படிக்க

0 comments: