Thursday, October 2, 2008

தமிழிசை - அன்றும் இன்றும் - முனைவர் இரா. திருமுருகன்

தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள் தமிழே பாடச் செய்யுங்கள் அதற்காகத் திரண்டெழுங்கள்! இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை எனஉரைத்தால் அறையுங்கள்! (எது இசை?) என்று பாடினார் பாவேந்தர்.

விலையில்லாப் பெருமைபல உடையதேனும் விளங்காத மொழியினிலே பாட்டைக்கேட்டுத் தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும் தனக்கதுவோர் கலையின்பம் தருவதுண்டோ?

என்று பாடினார் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. என்றாலும் இன்றுவரையில் தெலுங்கில் பாடும் வழக்கமே இருந்துவருகிறது.

வரலாற்றுக் கெட்டாத தொன்மைக்காலத்தில் தோன்றி வளர்ந்துவந்த தமிழிசைக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடநாட்டுச் சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரம் தான் இலக்கணநூல் என்றும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இருந்த தியாகராசர் (1767-1847), சியாமா சாத்திரி (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776 - 1835) ஆகியோர்தாம் முதன்முதல் கர்நாடக சங்கீதம் பாடிய சங்கீத மும்மூர்த்திகள் என்றும் சிலர் அறியாமையாலோ, வேண்டுமென்றோ கூறிவருகின்றனர். இவர்களுக்கு முன்பு 4ஆம் நூற்றாண்டுகளில் பண்ணிசை பாடிய காரைக்காலம்மையார், 7, 8ஆம் நூற்றாண்டுகளில் தமிழிசை பாடிய முத்துத்தாண்டவர் (1560-1640), மாரிமுத்தா பிள்ளை (1712 -1787), அருணாசலக் கவிராயர் (1711-1779) ஆகியோரை அறிந்தவர்களும் மறைக்கின்றனர். சில இனத்தார் இசைக்கலைக்குத் தாமே உரியவர்கள் என்று சொந்தங் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க

0 comments: