இந்திய நாட்டின் இன்றையக் கல்வி வெறும் போலியாக இருக்கின்றது. இளைஞர்களின் மூளையை மழுங்கடித்து உண்மையான வாழ்க்கையிலிருந்து அவர்களை முடக்கி வைத்திருக்கின்றது. இளைஞர்கள் வெறும் பொருளீட்டும் எந்திரங்களாக மட்டுமே உருவாக்கப்படுகின்றனர். மக்கட்குப் பயன்படும் ஆக்க வழி எதுவும் அவர்கட்குக் கற்றுக் கொடுக்கப்படவில்லை.
தமிழ் இளைஞர் தமிழ் இளைஞராக இல்லை. தமிழர் என்ற அடையாளத்தையே அவர்கள் இழந்துபோய் விட்டனர். தங்கள் சொந்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் முற்றும் அயலாராகவே அவர்கள் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் பல்லாண்டுகளாக அவர்கள் பயின்று வந்த ஆங்கிலவழிக் கல்வியே. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் உரிய முதன்மையும் மதிப்பும் வழங்காத கல்வியாக அது இருந்தது. இன்றும் அவ்வாறே இருந்துவருகின்றது. இந்தியாவில் ஆங்கிலேயனின் ஆட்சி எந்திரத்தை நடத்திச் செல்லத் தேவையான அதிகாரிகள் அலுவலர்கள், ஊழியர்கள் உருவாக்குவதற்கென்றே மெக்காலே என்ற ஆங்கிலேயன் கொண்டுவந்த கல்வித்திட்டம் புகுத்திய கல்வி அது. ஆகையால் அலுவல் பார்ப்பதையே நோக்கமாகக் கொண்டு இளைஞர் அதைப் பயின்றனர். கல்வி தன் உயர்ந்த நோக்கங்களை இழந்து வெறும் வயிற்றுப் பிழைப்புக் கல்வியாக மாறியது. மேலும் படிக்க
Thursday, June 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment