உலக மொழிகளில் உள்ள இலக்கணங்களில் காலத்தால் மூத்ததாக அமைந்த தொல்காப்பியம் தமிழுக்குத் தனிச்சிறப்புச் சேர்த்துள்ளது. இதன் காலத்தை வரையறை செய்யவேண்டும் என்னும் கருத்துத் தமிழறிஞர் களிடையில் முகிழ்த்துள்ளது. பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் இம்முயற்சியை முடுக்கி விட்டிருப்பது வரவேற்கத் தக்கது. தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தின் மேல்வரம்பும், கீழ்வரம்பும் வரையறுக்க அகச் சான்றுகளான தொல்காப்பிய நூற்பாக்களைத் துணைகொள்வது நம்பத்தகுந்த அணுகுமுறை. இதனைத் தமிழ் மூதறிஞர்கள் அனைவரும் ஒருமனமாக ஒப்புவர் எனக் கருதுகிறேன்.
மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment